வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஜால்ரா கவிஞர் ஜாலி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள். இரவு ஒரு அம்மா விசுவாசி நண்பருடன் டாஸ்மாக்கில் இருந்த பொழுது, மனிதர் புலம்பிக்கொண்டிருந்தார்.


"அம்மா மட்டும் இப்போ சி. எம்மா இருந்தாங்கன்னா இப்படியா இருக்கும், எவ்வளவு பேர் வாழ்த்து சொல்லிருப்பாங்க! பாராட்டியிருப்பாங்க! எல்லாம் நேரம்! அடுத்த வருஷம் பார்!" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.


நான் இரவெல்லாம் இதே நினைவாக மப்பில் இருந்த போது,எதற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும், இப்பொழுதே கற்பனையில் இறங்கினால் என்ன? என்று தோன்றியது. அணுகினேன் ஜால்ரா கவிஞர் ஜாலி யை. சி.எம் அம்மாவுக்காக அவர் எழுதிய கவிதை இதோ! (கவிதை!கவிதை! படி.................?)


முன் குறிப்பு:

இந்த கவிதை முழுக்க முழுக்க கற்பனையே. படித்து விட்டு சிரித்து விட்டுபோகவும்



போயஸ் தோட்டத்து அம்மா - நீதான்

கும்தலக்கடி கும்மா- மற்றவரெல்லாம்

வுட்டாலக்கடி சும்மா!

கொடுத்து கொடுத்து சிவந்தது உன் கரம்.

அதனால் உனக்குத் தானே பெண்ணா கரம்?


சமூக நீதி காத்த வீராங்கனையே,

உன் அறிக்கை ஒவ்வொன்றும் ஏவு கணையே!

உயிரோடு இருந்திருந்தால் உன்னை

உச்சி மோர்ந்திருப்பார் பெரியார்.

உன்னால் தானே தமிழருக்கு கிடைக்க விருக்கிறது

முல்லைப் பெரியாறு!


தமிழர் வாழ்வில் ஏற்றி வைத்தாய் ஒளி

அதுதானே அவர்தம் வாழ்வுக்கான வழி?

உலகிற்கே நீதான் விழி!

இது தெரியாமல் பிதுங்குகிறது, உன்

எதிரிகளின் முழி!

பலர் போட்டார்கள் உன் மேல் பழி, நீ

எடுத்து வீசினாய் நீதி என்னும் கழி!

திரும்பவும் உனக்கு மகுடம்,

ஏனென்றால் அதுதான் உன் சுழி! உன்

எதிரி கூடாரம் ஆகிவிட்டது காலி. ஏனென்றால்

உனைப் புகழும் நான்

ஜால்ரா கவிஞன் ஜாலி!


பாரதி கண்ட புதுமைப் பெண்ணே, உன்னைப்

போற்றுகிறது இந்த பாரத மண்ணே! உன்

பெயர்தான் இனி எங்களுக்கு நாட்டுப் பண்ணே!


ஆண்டின் முதல் மாதம் ஜனவரி, நீதான்

தமிழ் நாட்டின் முகவரி. இதற்கு

முன்பிருந்தது ஒரு சர்வாதிகாரி.


தமிழகத்தின் கைவிளக்கேந்திய காரிகையே,

உன்னிடம் வைக்கிறோம் ஒரு கோரிக்கையே

அறிவித்து விடு இந்த நாளை

தமிழ் புத்தாண்டாய் ! மாறட்டும்

அது ஆண்டாண்டாய்!


இப்படிக்கு,

எல்லா முதல்வருக்கும்

ஜால்ரா அடிக்கும்

ஜால்ரா கவிஞர் ஜாலி !


(பெரியவர் மன்னிக்க.......................)

கருத்துகள் இல்லை: