வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அஜீத்தின் அட்டகாசம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

சமீபத்தில் கருணாநிதிக்கு திரையுலகின் சார்பில் மேலும் ஒரு பாராட்டு விழா நடந்தது.(இதற்கு ஏதாவது கின்னஸ் ரெகார்ட் இருக்குதா? இருந்தால், நம்மாள்தான் ரெகார்ட் ஹோல்டர்).

இதில் ஒன்றும் விசேஷசெய்தி இல்லை. அதில் அஜீத் பேசியதுதான் விசேஷம்.பொதுவாகவே அவர் எந்த ஒரு விழாவிலும் கலந்து கொள்வதை தவிர்ப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.அப்படியே கலந்து கொண்டாலும் அபூர்வமாகத்தான் மைக் பிடிப்பார்.

இந்த முறை வெளுத்து வாங்கிவிட்டார்.திரையுலகில் நிலவி வரும் ஒரு விரும்பத்தகாத போக்கு எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம்,மனிதசங்கிலி,மறியல்,ஊர்வலம் நடத்துவது.காவிரியில் தண்ணீர் தரவில்லையா?நடத்து ஒரு அடையாள உண்ணாவிரதத்தை.

உண்ணாவிரதம் என்றால் காந்தி இருந்த உண்ணாவிரதம் என்றா நினைக்கிறீர்கள்? அட அசடுகளே? காலையில் வயிறு நிறைய சாப்பிட வேண்டியது.பின்பு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து உட்காரவேண்டியது.மைக் கிடைத்தவுடன் கர்நாடக காரனையோ,இல்லை கேரளா காரனையோ அடிப்பேன் உதைப்பேன் என்று சகட்டு மேனிக்கு வீராவேசம் பேசுவது.பக்கத்தில் இருக்கும் நடிகைகளிடம் சிறிது நேரம் கடலை போட்டுக்கொண்டிருந்தால், மாலை ஆகிவிடும். உடனே பழரசம் வந்துவிடும்.குடித்து விட்டு தமிழ்வாழ்க என்று முழங்கிவிட்டு, வீட்டிற்கு போய் பிரியாணியை ஒரு பிடி பிடிப்பது.இது தான் உண்ணாவிரதம்.

இந்த உண்ணாவிரதத்தை கலைஞர் டிவி யில் லைவ் ஆக பார்த்து நாம் மகிழலாம்.
ஆனால்,உடனே காவிரியில் தண்ணீர் கிடைத்துவிடும் என்று யாராவது எதிர்பார்த்தால் அதற்கு நடிகர்கள் பொறுப்பாளி ஆக முடியாது.அவர்கள் வேலை அந்த அரை நாள் உண்ணாவிரதம் மற்றும் மாநில வெறியை தூண்டும் பேச்சுக்கள் மட்டுமே.

அதற்கு அடுத்த வாரமோ அடுதத மாதமோ அவர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் அவர்களுக்கு நல்லுணர்வு ஏற்பட்டு சக மாநிலத்தவர்களோடு சமாதானமாக போய் விடுவார்கள்.பின்னே காசு பார்க்க வேண்டாமா?பின் எதற்காக இந்த உண்ணாவிரத நாடகமெல்லாம்?

அஜீத் இதை போட்டு உடைத்துவிட்டார்.ஒரு சிலரின் வற்புறுத்தல் மற்றும் பயம் காட்டுதலே இதற்கு காரணம்.கருணாநிதி யின் ஆசி பெற்ற ஒரு சிலர்,அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த தொல்லையை திரையுலகின் மீது திணித்து வந்துள்ளார்கள்.

இது ஒரு விரும்பத்தகாத போக்கு.ஒரு போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அது அவர்களின் உரிமையும் கூட. ஏன் அவர்களுக்கு என்று எந்த ஒரு கருத்தும் இருக்காதா?அதே போல்தான் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு முதல்வருக்கு ஜால்ரா தட்டுவது அவரவர் விருப்பம்.

இதை அஜீத் முதல்வர் முன்பாகவே பட்டவர்த்தனமாக பேசியிருப்பது, அவருடைய துணிச்சலை காட்டுகிறது.அந்த பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டிய ரஜினிக்கும் நமது பாராட்டுக்கள்.(தலைவா!நீங்க பேசியிருக்கனும்).

பூனைக்கு மணி கட்டியாச்சு.பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: